மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே செல்போன் தடை!


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே இன்று முதல் செல்பேசி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த கடைகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக இனி கோவிலின் உள்ளே மொபைல் போன் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவிலில் பக்தர்களின் இடையூறு, அமைதியான தரிசனம், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக கோயிலுக்குள் செல்பேசி கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. செல்பேசி எடுத்து வரும் பக்தர்கள் அதை பாதுகாப்பாக வைப்பதற்காக வசதி வடக்கு மற்றும் மேற்கு கோபுரவாசலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 1 செல்பேசிக்கு 10ரூ கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



Leave a Comment