100 சாமிகளுக்கு கடலில் தீர்தவாரி...


கடலூர் மாவட்டம். பெரியகுப்பம். மற்றும் கிள்ளையில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற மாசிமக திருவிழாவில் பூண்டி யாங்குப்பம், நீராழி, கம்பிளிமேடு, ஆலபாக்கம், அகரம், வழதளம்பட்டு, தோப்புகொள்ளை, கீழ் பூவாணி குப்பம், பெரிய காட்டுசாகை, உள்பட 100-க்கு மேற்பட்ட சாமிகள் டிராக்டடர் மூலம் பெரியகுப்பம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் ஏராளமான பொதுமக்கள் பெரியகுப்பம் கடலில் புனித நீராடினார்கள். அதேபோல கிள்ளையில், மாசிமக திருவிழா சிறப்பாக நடந்நது. கிள்ளை, தைக்கால், சிங்காரகுப்பம், மாணம் பாடி, பொன்னந்திட்டு, கீழச் சாவடி உள்பட இருபதுக்கும் மேற்பட்ட சாமிகள் டிராக்டடரில் ஊர்வலமாக வந்து முழக்குதுறை கடலில் தீர்தவாரி நடந்தது. மாசிமக திருவிழாவில் - ஏராளமான பக்தர்கள் முழக்குதுறை கடலில் புனித நீராடினார்கள்.



Leave a Comment