ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா...


பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா மார்ச் 22-ந் தேதி தொடங்குகிறது. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஒரே நேரத்தில் இந்த கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது, உலக சாதனையாகி ‘கின்னஸ்‘ புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறது. எனவே இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்புக்குரியதாகும். 1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி நடந்த பொங்கல் வழிபாட்டில் 15 லட்சம் பெண்களும், 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதி நடந்த பொங்கல் வழிபாட்டில் 25 லட்சம் பெண்களும் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment