நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை


ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சார்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரேஉள்ளது இந்த கோயில். இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்க ளுக்கு அருள்பாலித்து வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர். ஆனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சிலைக்கு 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சார்த்தப்படுகிறது. மேலும் காலை முதல் பல்வேறு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. அபிஷேகங்கள் முடிந்தது ஆஞ்சநேயருக்கு சார்த்தப்பட்ட வடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.



Leave a Comment