மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய மப்பேடு ....


திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆனந்த நர்த்தனம் புரிந்தபோது சிங்கி என்கிற நந்தி பகவான் மிருதங்கம் வாசிப்பதிலேயே தன் கவனம் முழுவதையும் செலுத்தியதால், அவரால் சிவனின் நடனத்தைக் காணமுடியாமல் போனது. ஆயினும் சிவபெருமானின் ஆனந்த நர்த்தனத்தைக் காண விரும்பி தவம் மேற்கொண்டு, மெய்ப்பேடு என்கிற இவ்விடத்தில் சிவனைப் பூஜை செய்து வந்தார். சிங்கி என்கிற அந்த நந்தியின் பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் அவ்விடத்தில் தோன்றி ஆனந்த நர்த்தனத்தை மீண்டும் ஆடிக்காட்டியதால் இத்தலத்தின் இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என்று பெயர். அம்பாள் மணம் மிகுந்த மலர்களை விரும்புபவள் ஆதலால் புஷ்ப குஜாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள். Singeeswarar Temple Mappedu. Veenai Aanjaneyarjpg மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவரான ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு அதே மூல நக்ஷத்திர தினத்தன்று சரஸ்வதி அவருடைய நாவில் சிங்கநாத பீஜாக்ஷர மந்திரங்களைப் பொறித்தார். மேலும், ஆஞ்சனேயரும் அதே மூல நக்ஷத்திர தினத்தன்று இத்தலத்தில் சிங்கநாதம் இசைத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றார். இத்தலத்தில் ஆஞ்சநேயர் வீணையுடன் இசைக்கலைஞராகக் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். அவர் இத்தலத்தில் அமிர்தவர்ஷணி ராகத்தை இசைத்ததாகவும் தலபுராணம் சொல்கிறது. எனவே மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது. மூல நக்ஷத்திரத் தினத்தன்று இங்கே வந்து ஆஞ்சனேயரை வழிபடுவது நலமளிக்கும்.



Leave a Comment