நாக தோஷம்  தீர்க்க சுப்பிரமணியர்  கோவிலுக்கு செல்க!


 

ராமபிரானால்  நிறுவிய சுப்பிரமணியர் ஆலயம்  கேரளாவில்  கண்ணூர் நகரிலிருந்து  கூத்தம்பாரா செல்லும் வழியில் 14  கிலோமீட்டர் தொலைவில் பேரளச்சேரி சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.

நாக தோஷம் நிவர்த்தி தர வல்ல கோவில் இதுவாகும். இக் கோவிலில் உள்ள பாம்பு  தெய்வங்களுக்கு முட்டையை படைத்து வழிபடு வார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில்  தினமும் நடைபெறும் நாகபூஜையில் கலந்துக் கொண்டு தங்களுடைய தோஷத்தை போக்கி  வளமான வாழ்க்கையை வழங்கும் படி வேண்டிச் செல்கின்றனர்.

 

தல  வரலாறு

படைப்புக் கடவுளான பிரம்மனுக்குத் தன்னைத் தவிர வேறு எவராலும் படைப்புத் தொழிலைச்  சிறப்பாக செய்ய முடியாது என்கிற கர்வம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தன்னுடைய படைப்புத் தொழிலின் பெருமைகளைச் பற்றிச் சிவபெருமானிடம் சொல்லி,அவரது பாராட்டுகளைப் பெற்று செல்லாம் என நினைத்து கயிலாய மலைக்கு வந்தார்.

அவர் வந்த வேளையில்,இறைவன் சிவபெருமான் தியானத்தில் இருந்தார். அதனால் ,கயிலாய மலையில் இருந்த விநாயகர்,முருகன்,நந்தி,சிவகணங்கள்,முனிவர்கள் என்று அனைவரும் வெளியில் காத்திருந்தனர்.அங்கிருந்த அனைவருக்கும் மரியாதை செலுத்திய பிரம்மன். சிறுவனாக இருந்த முருகனுக்கு மட்டும் மரியாதை செலுத்தவில்லை.

 இதனால் கோபத்தில் இருந்த முருகர் பிரம்மனிடம் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று கேட்டார்.

அந்த கேள்விக்கு பிரம்மனுக்கு  பதில் சொல்ல  முடியவில்லை. அவர் பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்தார்.உடனே, ’பிரணவத்தின் பொருள் தெரியாமல் படைப்புத் தொழில் செய்வது மட்டுமில்லாமல், அதை நினைத்துப் பெருமை கொள்கிறாயா?’ என்று சொல்லியபடி அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.

தியானத்தில் இருந்த எழுந்த சிவ பெருமான்,பிரம்மனை முருகன் சிறை வைத்திருப்பதை அறிந்த அங்கே வந்தார்  அவர் முருகனிடம் பிரம்மனை விடுவிக்கும் படி வேண்டினார்.

 தனது தந்தையே நேரில் வந்து வேண்டியதால் முருகனும் முருகன் பிரம்மனை விடுவித்தார். அதன் பின்னர் சிவ பெருமான், பிரணவத்தின் பொருள் உனக்கு தெரியுமா என முருகனிடம் கேட்டார். நன்றாக தெரியும் என்றார் முருகர். அப்பொருளை எனக்குச் சொல்லும் படி இறைவன் கேட்டார். உரிய முறையில் கேட்டால் உங்களுக்கு விளக்கமாகச் சொல்வேன் என்றார்  முருகர். இதையடுத்து சிவபெருமான்  முருகன் முன்பாகச் சீடனாக அமர்ந்து ,பிரணவம்  குறித்து விளக்கம் கேட்டார். முருகனும் சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தின் முழுப் பொருளையும்  விளக்கினார். அன்று முதல் ,சுவாமியாகிய சிவ பெருமானுக்கு முருகன்  குருநாதனாக ஆனார்.அதனால் முருகன்,சுவாமிநாதன் என்றும்,பரமகுரு என்றும் தகப்பன்சாமி என்றும் பல பெயர்களால் போற்றப்பட்டார். இந்த கதை நாம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

 முருகன் படைப்புக் கடவுளைச் சிறை வைத்தால் ,பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்ய முடியாமல் போனது. அதனால் முருகனுக்கு ஒருவரின் தொழிலைச் செய்ய விடாமல் தடுத்த பாவம் வந்து சேர்ந்தது. அதனால்  அந்த பாவத்திலிருந்து விடுபதுவதற்காகத் தந்தை சிவபெருமானின் அறிவுறுத்தலின் படி, நாகப்பாம்பாக உருவம்  கொண்டு பூமியில் தனிமைபடுத்தப்பட்டீருந்த கிணறு ஒன்றில் வாழ்ந்து வந்தார். அவரைச் சூரிய வெப்பம் ,மழை ஆகியவற்றிலுருந்து பாதுகாப்பதற்காக பல பாம்புகள்  அவருக்குக் குடையாக  நின்று அவரை காத்துக் கொண்டிருந்தன.

தனது மகனின் நிலையை நினைத்து வருந்திய பார்வதி தேவி,சிவ பெருமானிடம்,முருகனை நாகப்பாம்பு உருவிலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளைக் கேட்டார்.சிவ பெருமான் சொன்ன வழி முறைகளின் படி, பார்வதி தேவி பதினெட்டு  சஷ்டி விரதங்களை மேற்கொண்டு,கிணற்றில் பாம்பு வடிவிலிருந்த முருகனைத் தொட்டதும் முருகன் உண்மையான தோற்றத்தைப் பெற்றார்.

 

 

சீதையை தேடி இந்த பகுதிக்கு  வந்தார் ராமபிரான். அந்த இடம் சுப்பிரமணியர் கோவில் இருக்க வேண்டிய இடம்  என்பதை உணர்ந்தார். அங்கு கோவில் அமைக்க திட்ட மிட்ட ராமர்,அனுமனை இமைய மலைக்கு சென்று  சுப்பிரமணியர் சிலையை செய்து கொண்டு வரும் படி அனுப்பினார். அனுமன் சிலையை கொண்டு வர தாமதம் ஆனாதால்,ராமர் தன் கையில்  அணிந்திருந்த வளையல் ஒன்றினை எடுத்துக் கோவில் கருவறையில் சிலையாக நிறுவிக் கும்பாபிஷேகம் நடத்தி முடித்து விட்டார். அதன் பின் அனுமன்  தான் கொண்டு வந்த சுப்பிரமணியர் சிலையை அருகில் உள்ள இடத்தில் நிறுவி கும்பாபிஷேகம் நடத்தினார்.

 இங்கு சுப்பிரமணியர் நாக வடிவில்  இருந்ததால் இக்கோவிலில் தாமிரம் மற்றும் வெண்கலத்தால்  ஆன பாம்பு சிலைகளே முதன்மைக் கடவுளாக இருக்கின்றன. கோவில்  வளாகத்தில் பல இடங்களில் பாம்புகளின் கற்சிலைகளும்  வைக்கப்பட்டிருகின்றன.

இக் கோவிலில் உள்ள பாம்பு  தெய்வங்களுக்கு முட்டையை படைத்து வழிபடுவர்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில்  தினமும் நடைபெறும் நாகபூஜையில் கலந்துக் கொண்டு தங்களுடைய தோஷத்தை போக்கி  வளமான வாழ்க்கையை வழங்கும் படி வேண்டிச் செல்கின்றனர்.

கோவில் வளாகத்தில்  சுப்பிரமணியர் நாகப்பாம்பு வடிவத்தில்  வாழ்ந்த  கிணறு என்று  கருதப்படும் மிகப்பெரிய படிக்கிணறு இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில்  அமைக்கப்பட்டிருக்கும் படிகிணற்றைப் போல மிகபெரியதாகவும், அந்தக் கட்டுமானத்தைப் போன்ற தோற்றமுடையதாகவும் இருக்கும். இந்த கிணறு தென்னிந்தியாவின் மிகப்பெரிய படிக்கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.

    



Leave a Comment