நீண்ட ஆயுளை தரும் திருக்கடையூர்...


மயிலாடு துறையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருக்கடையூர் சிவன் கோயில். ஈசன் தனது பக்தன் மார்க்கண்டேயனுக்கு அபயமளிக்க காலனை சம்ஹாரம் செய்து, கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ஸ்தலம். இங்கே வந்து இறைவனைத் தொழுதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். வயது முதிர்ந்தவர், உடல் நலம் குன்றியவர், அகால மரணம் ஏற்படும் நிலை, ஆயுள் பாதிப்பு உள்ளவர் நீண்ட ஆயுள பெற இங்கு ம்ருத்யுஞ்சய ஹோம்ம், ஆயுள் ஹோம்ம் செய்து கொள்ளலாம். தம்பதிகள் 59 வயது முடிந்து 60 வயது ஆரம்பிக்கும் போது ‘உக்ரரத’ சாந்தி பூஜையும், 60 வயது முடிந்து 61 வயது தொடங்கும் பொழுது சஷ்டி அப்த பூர்த்தியும், 69 வயது முடிந்து 70 வயது ஆரம்பிக்கும் போது ‘பீமரத சாந்தி’ பூஜையும், 79 வயது முடிந்து 80 வயது ஆரம்பிக்கும் போது ‘சதாபிஷேகமும்’ செய்து கொண்டால் பூரண ஆயுள் கிடைக்கும்.

 



Leave a Comment