முன்ஜென்ம பாவங்கள் தீர்க்கும் அருள்மிகு நவபாஷாணம் தலம்


முன்ஜென்ம பாவங்களை தீர்க்கும் தலமாக ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் உள்ள நவபாஷாணத் தலம் உள்ளது. இராவணனால் சீதை சிறை வைக்கப்பட்டதை அறிந்து அவரை மீட்க ஸ்ரீ ராம பிரான் தென் திசை நோக்கி வருகிறார். வேத சாஸ்திரங்களில் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பு பிள்ளையார் பூஜை,நவகிரக பூஜை செய்வது வழக்கம்.அதனால் ஸ்ரீ ராமரும் உப்பூர் விநாயகரை பூஜித்த பின்பு இத்தலத்தில் நவகிரகங்களை 9 பிடி மணல் கலவையால் பிரதிஷ்டை செய்கிறார்.அவ்வமயம் கடல் கொந்தளிப்பு ஏற்பட தமது திருக்கரத்தை உயர்த்த கடல் அமைதி அடைந்ததாக ஐதீகம்.ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் நவ பாஷாணமாக அமைந்து இன்று அருள் தருகின்றனர். முன்ஜென்ம பாவங்கள் தீர,பிதுர்கடன் கழிக்க தர்ப்பணம் ஸ்ரார்த்தம் முதலியவை செய்யலாம்.,நவகிரக தோசங்கள் விலக இங்கு வழிபடலாம். இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள்,கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம். நாம் முற்பிறவியில் செய்த கர்மாவின் பயனாக மனிதர்களாகப் பிறந்து நாம் செய்த பாவ புண்ணியகளின் அடிப்படையில் நம்மை வழிநடத்தி செல்வது நவகிரகங்களேயாகும்.இத் தலத்தில் உள்ள நவகிரகங்களை 9 நவ தானியங்கள் வைத்து இங்குள்ள நவகிரகங்களை வழிபட்டால் வணங்கினால் சகல பலன்களும் கிடைக்கும். நவதானியங்கள் படைத்தல், நவகிரக வலம், தானம் செய்தல், தோச பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாகும்.



Leave a Comment