அதிசயத்திலும் அதிசயம் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோவில்கள்  


 

இந்தியாவில் உள்ள பிரபல எட்டு சிவன் கோவில்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டன. இந்த எட்டு கோவில்களுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அதாவது இந்த எட்டு கோவில்களும் மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தான் ஆச்சரியம்

இந்தியாவில் உள்ள பிரபல எட்டு சிவன் கோவில்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டன. இந்த எட்டு கோவில்களுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அதாவது இந்த எட்டு கோவில்களும் மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தான் ஆச்சரியம் அளிக்க கூடிய விடயமாகும்.



ஏன் ஆச்சரியம்? அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை (latitude and longitude) யை அளந்து தான் இப்படி ஒரே மாதிரி இருக்கும் வகையில் வடிவமைக்க முடியும்.

ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த விதமான அறிவியல் சார்ந்த செயற்கை கோள் தொழில்நுட்பங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை!
பின்னர் இது எப்படி சாத்தியமானது என்பது மர்மமாகவே உள்ளது.

 இங்குள்ள பாரம்பரிய கலை ச்சின்னங்களை, ஐக்கிய நாடுகள்சபை கலாசாரக்குழு, சர்வதேச பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரித்துள்ளது
அதுவும் இதில் எல்லா கோவில்களும் வேறு வேறு திசையில் அமைந்துள்ளது. எடுத்துகாட்டுக்கு கேதாரிநாத் கோவிலுக்கும், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கும் இடையேயான இடைவெளி 2383 கிலோ மீட்டர் ஆகும்.


இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தாலும் ஒரே மாதிரி நேர்கோட்டில் அமைந்திருப்பது பெரிய ஆச்சரியம் தான்.
அது மட்டுமா! இந்த கோவில்களில் ஐந்து கோவில்கள் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ளது. 

அதாவது, திருவனைகாவலில் இருக்கும் ஜம்புகேஷ்வரா கோவில் நீரையும், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் நெருப்பையும், காலேஷ்வரத்தில் அமைந்துள்ள காலேஷ்வர முக்தீஷ்வர கோவில் காற்றையும்,காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஷ்வரர் கோவிலானது நிலத்தையும், சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவிலானது ஆகாயத்தையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வளவு பெரிய விஷயங்கள் நிச்சயம் எதிர்பாராமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் பெரிய சம்பவங்கள் இதன் பின்னர் இருக்கும் என்பது தான் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.



Leave a Comment