திருப்பதி லட்டு இங்கேயும் கிடைக்கும்!


திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள், இனி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பத்மாவதி தாயார் கோவில் உள்ளே டோக்கன் பெற்று, கோவிலுக்கு வெளியே உள்ள கவுண்ட்டர்களில் திருப்பதி லட்டு பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. அதையொட்டி பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்வதற்காக, திருமலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 ஆயிரம் லட்டுகள் வாகனத்தில் திருச்சானூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள், பத்மாவதி தாயார் கோவில் உள்ளே டோக்கன் பெற்று, கோவிலுக்கு வெளியே உள்ள கவுண்ட்டர்களில் லட்டு பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் பத்மாவதி தாயார் கோவில் லட்டு பிரசாதமும் விற்பனை செய்யப்படுகிறது, என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Leave a Comment