குமரி திருப்பதி கோயில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு


குமரி திருப்பதி கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27-இல் நடத்தப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் கேந்திர நிர்வாகம் நன்கொடையாக வழங்கிய 5.50 ஏக்கர் நிலத்தில் ரூ.22.50 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடாசலபதி சன்னிதி, பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் சன்னிதிகளும், கருட பகவான் சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளன.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், தேரோட்டம், தெப்பத் திருவிழா போன்ற அனைத்து விழாக்களும், அதே நாளில் அதே நேரத்தில் இங்கு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கோயில், கடற்கரையின் மிக அருகே அமைவது மிகவும் சிறப்பானதாகும். மேலும், இக்கோயிலில் பிரமோற்சவம் நடைபெறும் நாளன்று வெங்கடாசலபதி சுவாமி பாதத்தில் சூரிய ஒளி விழும் விதத்தில் கோயில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜன. 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



Leave a Comment