கார்திகை சோமாவார விரதம்


சோமாவார விரதம் என்பது கார்த்திகை திங்கள் கிழமைகளில் சிவபெருமானை நினைத்து கடைப்பிடிக்கும் விரத முறையாகும்.

தனது மனைவியர்களிடம் பராபட்சமற்ற அன்பு காட்ட தவறிய சந்திரனை தட்சன் ஒளி இழக்குமாறு சபித்தான். ஒளி இழந்த சந்திரன் சோமாவார விரதமுறையைப் பின்பற்றி இறைவனின் திருவருளால் தேய்ந்து வளரும் நிலையைப் பெற்றான்.

மேலும் பிறைச்சந்திரனாக சிவபெருமானின் திருமுடியை அலங்கரிக்கும் பாக்கியத்தையும் கார்த்திகை சோமாவாரத்தில் பெற்றான். சந்திரனை சூடிய சிவபெருமான் சந்திரசேகரன் என்று அழைக்கப்படுகிறார்.

இவ்விரத முறையில் பகலில் உண்ணாமல் காலை மற்றும் மாலையில் சிவாலயம் சென்று வழிபட்டு இரவில் உண்ண வேண்டும். இவ்விரத முறையைப் பின்பற்றுவதால் திருமணம் ஆகாதவர்கள் நல்ல வாழ்க்கைத் துணையோடு வளமான வாழ்வு பெறுவர்.

திருமணம் ஆனவர்கள் நல்ல வாழ்க்கை கிடைக்கப் பெறுவர். இவ்விரத முறையில் கணவன் மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது சிறப்பான பலனைத் தரும்.



Leave a Comment