ஸ்ரீரங்கம் கோவிலில் 10 ஆம் தேதி ஊஞ்சல் திருநாள்


பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் திருநாள் 10 ம் தேதி தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.

ஊஞ்சல் திருநாளையொட்டி ஸ்ரீரெங்க நாச்சியார், 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் ஆரம்பமாகி 8 மணிக்கு நிறைவு பெறும். 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 16-ந்தேதி மட்டும் வழக்கம் போல் மாலை 5.30 மணிக்கு புறப்பாடாகி இரவு 9.30 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

ஊஞ்சல் திருநாள் நடைபெறும் நாட்களில் தாயார் சன்னதி வளாகத்தினுள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் தாயார் எழுந்தருளி தீபாராதனை பூஜை நடக்கிறது. தினமும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது.



Leave a Comment