தூத்துக்குடி ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்


தூத்துக்குடி சிவன் கோயிலான ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. ஆலய பட்டாச்சாரியார் செல்வம் பட்டர் தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, அம்பாள் - சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், இரவில் பித்தளை சப்பரத்தில் அம்பாள் வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்றன. திருவிழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், வீதியுலா நடைபெறுகிறது.
9ஆம் திருநாளான நவ. 2ஆம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது. 4 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பாகம்பிரியாள் - சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்கு சுவாமி - அம்பாள் பட்டணப் பிரவேசமும் நடைபெறுகிறது.



Leave a Comment