ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா....


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பந்தல் கால் நடும் நிகழ்ச்சி 25-ம் தேதி நடக்கிறது

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் டிசம்பர் மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. 8-ந்தேதி பகல் பத்து விழா தொடங்கி 17-ந்தேதி மோகினி அலங்காரமும், 18-ந்தேதி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

24-ந்தேதி திருக்கைத் தல சேவை, 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறியும், 27-ந் தேதி தீர்த்தவாரியும், 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணிக்குள் திருக்கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.



Leave a Comment