சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா


திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் ஏழாம் நாளில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 10-ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. விழாவின் 6-ம் நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்திலும், மாலை யானை வாகனத்தில் மலையப்பசாமி ராமச்சந்திரமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தார்.

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் சூரிய நாராயணமூர்த்தியாக நான்கு மாடவீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைதொடர்ந்து, இன்று இரவு சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா வர உள்ளார்.



Leave a Comment