திருவள்ளூர் வீரராகவர் கோயில் நவராத்திரி விழா


திருவள்ளூர் வீரராகவர் கோயில் சார்பில் நவராத்திரி விழா மற்றும் வேதாந்த தேசிகரின் 750 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொலுக்களை கண்டு வியந்தனர். பள்ளி மாணவ மாணவிகளின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் சார்பில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு நவராத்திரி விழாவும், வேதாந்த தேசிகரின் 750 வது பிறந்த நாள் நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாறு மீது நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.. பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நவராத்திரி விழாவையொட்டி 9 வகையான கொலு பொம்மைகள் அரங்கத்தில் வைக்கப்படிருந்தது.

வீரராகவப் பெருமாளின் முழு அவதாரமும் பொம்மைகளாக வடிவமைத்து காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். அதே போல் கிருஷ்ணரின் முழு அவதார பொம்மைகளும், ராமானுஜரின் சிலையும் வைக்கப்பட்டிருந்தன. இதனைக் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கண்டு களித்தனர்.



Leave a Comment