சபரிமலை கோவில் நடை திறப்பு


சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் நிலையில் கோவிலுக்கு வரும் பக்தா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழை, நிலச்சரிவு காரணமாக ஒட்டுமொத்த மாநிலமும் நிலைக்குழைந்தது. இந்நிலையில் பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலையில் நடைபெற்ற நிறை புத்தரிசி, ஆவணி மாத பூஜை மற்றும் திருவோண பூஜைகளுக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் புரட்டாசி பூஜைக்கு சபரி மலை தயாராகி வருகிறது. நாளை மறுநாள் சபரிமலை திறக்கப்படும் நிலையில் அங்கு வரும் பக்தா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், பக்தா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உணவு, குடிநீா் கொண்டு வரவேண்டும். காடுகளுக்குள் செல்லக் கூடாது. புதை குழிகள் இருப்பதால் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு செல்லக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேவசம் போர்டு விதித்துள்ளது.



Leave a Comment