இந்தியாவின் பத்து பணக்கார கோயில்கள்


பத்மநாப சுவாமி கோயில்
பத்மநாப சுவாமி கோயில் விஷ்ணுவை கடவுளாக கொண்ட கோயில் பத்மநாப சுவாமி கோயில் ( திருவனந்தபுரம் ) , கேரளா . இந்திய கோயில்களில் முதல் செல்வந்த கோயில் பத்மநாப சுவாமி கோயில். இந்த கோயிலில் 6 ரகசிய அரை உள்ளது. ரகசியம் நிறைந்த இந்த அறைகளில் எண்ணிலடங்கா புதையல்கள் கொட்டி கிடகின்றன, இந்த 6 ரகசிய அறைகளில் 4 இல் ஆவணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது , ஆனால் மீதமுள்ள 2 அறைகளில் பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடைகள் தங்கம் வைடூரியம் போன்ற எண்ணற்ற செல்வங்கள் உள்ளன.

திருப்பதி பாலாஜி கோயில்
திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயம் வெங்கடேஷ்வரரின் பழமையான புனிதமான கோயில் ஆகும். இது இந்து கடவுளான விஷ்ணுவின் ஒரு வடிவமாகும். திருப்பதி மலைகளின் ஏழாவது சிகரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது “ஏழுமலையான் கோயில்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 80,000 உள்ளது. பாலிவுட், விளையாட்டு மற்றும் வணிகத் தொழிற்துறையில் இருந்து பல புகழ்பெற்ற பிரபலங்கள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். ஒவ்வொரு தடவையும் அவர்கள் வருகை தரும் போதும் பல கோடிகளை நன்கெடையாக கோவிலுக்கு செலுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 1000 கோடியை நன்கொடையாக வருகிறது.


சாய் பாபா கோவில்
சாய் பாபா கோவில் இந்தியாவில் உள்ள மற்றொரு பிரபலமான யாத்ரீக ஸ்தலமாகும். சாய் பாபாவிற்கு தனி மதம் என்று எதுவும் இல்லாத காரணத்தால் அணைத்து மதத்தினரும் இந்த கோவிலுக்கு வந்து செல்வதை காணலாம். அவரது வாழ்க்கை முழுவதிலும் போதித்த ஒரே சொல் ‘கடவுள் ஒன்று’ என்று ,அதனை ‘சப்பா மாலிக் ஏக் ஹாய்’.அக்கோவிலில் ரூ. 32 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி ஆபரணங்களும், 6 லட்சத்திற்கும் அதிகமான வெள்ளி நாணயங்களும் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 350 கோடி ரூபாய் நன்கொடையாக அங்கு வரும் பக்தர்களால் அளிக்கப்படுகிறது.


வைஷ்ணவ தேவி கோவில்
வைஷ்ணவ தேவி கோவில் காத்ரா, ஜம்மு காஷ்மீர் நகருக்கு அருகே உள்ளது. இக்கோவிலுக்கு இந்திய மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள அம்மனின் ஆசிர்வாதத்தை பெற ஒன்றிணைகின்றனர். வட இந்தியாவில் உள்ள முக்கிய புனித தளங்களில் ஒன்றாக இக்கோவில் திகழ்கிறது. இது இந்தியாவின் பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த சன்னதிக்கு வருகை தருகின்றனர், பணம் செலுத்துகின்றனர். இக்கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக வருகின்ற வருமானத்தின் மதிப்பு ரூ. 500 கோடி ரூபாயாகும்.


சித்தி விநாயகர் கோவில்
சித்தி விநாயகர் கோவில் விநாயக பெருமானுக்கான ஒரு வழிபாட்டு தளமாகும். இக்கோவிலில் விநாயகர் ஒரு சிறு அறையில்தான் காட்சி தருகின்றார். பிரபலமான கோயில்களில் ஒன்றாக மும்பை சித்திவிநாயக் கோயில் ஆகும். கோயிலின் பொதுவான பார்வையாளர்களின் பட்டியலில் பல்வேறு பாலிவுட் பிரபலங்களாகும் அடங்குவர்.உள்ளூர் பார்வையாளர்களிடமிருந்து மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இந்த கோயிலுக்கு செல்கின்றனர். கணேஷ் மீது அணியப்படும் கிரிடமானது சுமார் 3.7 கிலோ தங்கத்தால் ஆனது இதனை கொல்கத்தாவில் உள்ள வணிக வியாபாரி ஒருவர் நன்கொடை அளித்துள்ளார். கோயிலின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ. 48 கோடி ரூபாயும் நிலையான வைப்பு நிதி ரூ. 125 கோடியாகும்.


பொற்கோவில்
பொற்கோவில் உலகின் மிக முக்கியமான சீக்கிய யாத்ரீக ஸ்தலம் ஆகும். இது இந்தியாவின் பஞ்சாப், அம்ரித்சர் நகரில் அமைந்துள்ள பொற் கோவில் குருத்வாரா என அழைக்கப்படுகிறது. இதன் பிரதான கோவில் கட்டிட சுவர்களில் மரத்தாலான பேனல்கள் மற்றும் விரிவான தங்கம் மற்றும் வெள்ளி வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.’ஆதி கிரந்த்’ (குரு கிரந்த் சாஹிப்) தாங்கி நிற்கும் அடித்தளம் விலையுயர்ந்த கற்கள் மற்றும் வைரங்களால் நிரம்பியுள்ளது. குரு கிரந்த் சாஹிப்பின் சுற்றளவானது தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றினால் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் இங்கு சுமார் 35,000 பக்தர்கள் கோவிலுக்கு வருகைபுரிகின்றனர். இக்கோவிலானது வடகிழக்கு திசையிலமைந்த மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கோயில்களுல் ஒன்று.


சோம்நாத் கோவில்
சோம்நாத் கோயிலின் சொத்துக்கள் ஒரு புதிராகவே இருந்தாலும், மிகவும் புகழ் பெட்ர பணக்கார கோவிலில் ஒன்றாகவே திகழ்கின்றது, நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. ‘சோம்நாத்’ என்ற பெயர், ‘சந்திர கடவுளின் காப்பாளர்’ என்று பொருள்படும், சிவபெருமானைக் குறிக்கும் இதன் கற்ப கிரகமானது முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்டுள்ளது.1,00,000 முதல் 5,00,000 பக்தர்கள் ஒவ்வொரு நாளும் இந்த இடத்திற்கு வந்து செல்கின்றனர். சோம்நாத் அறக்கட்டளையின் நிலசொத்துக்கள் ரூ .1,639.14 கோடியாக மதிப்பிடப்படுகிறது. இதுவும் இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.2012 ஆம் ஆண்டில், சூரத் மற்றும் மும்பையிலிருந்து வந்த இரண்டு வணிகர்கள், கோயிலுக்கு சுமார் 36 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.


மீனாட்சி அம்மன் கோவில்
மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் பழமையான கோயிலாகும்,இக்கோவில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.இதில் பார்வதி தேவி காட்சி புரிந்து மக்களுக்கு அருள் புரிகிறார்.இந்த கோவில் ஒரு நாளைக்கு 15,000 பக்தர்கள் வருகை புரிகின்றனர். வெள்ளிக்கிழமை 25,000 பேர் இங்கு கூடுகின்றனர். கோயிலில் சுமார் 33,000 சிற்பங்கள் உள்ளன. கோயிலுடன் தொடர்புடைய மிக முக்கியமான திருவிழா “மீனாட்சி திருக்கல்யாணம் “(மீனாட்சி தெய்வீக திருமணம்) ஆகும்.இது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மூன்றாவது பணக்கார கோவில்களில் ஒன்றாகும். வருடந்த மற்றும் மே மாதத்தில் 10 ஆவது நாள் மீனாட்சி திருக்கல்யாணம் திருவிழா கொண்டாடபடுகிறது. இத்திருவிழாவிற்கு சுமார் 1மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆறு கோடி 60 மில்லியன் ரூபாய் நன்கொடையாக வருகின்றது.இந்த கோவில் இரு தங்க விமனங்களும், 33,000 சிலைகளும் இருப்பது இக்கோவிலுக்கு சிறப்பை அளிக்கிறது.

காசி விஸ்வநாத கோவில்
காசி விஸ்வநாத கோவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது இது வாரனாசியில் அமைந்துள்ளது.இக்கோவிலின் மேற்கு கரையோரம் புனித நதியான கங்கை பாய்கிறது, இங்கமைந்துள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் விஸ்வநாதர் மிகவும் சத்தி வாய்ந்த கடவுளாக காட்சி தருகின்றார். கோயிலின் குறிப்பிடத்தக்க தூண்கள் மற்றும் கோபுரங்கள் தூய தங்கத்தால் செய்யப்பட்டவை.

அமர்நாத் கோயில்
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் தென் காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு சிவனின் புனித பனி லிங்கத்தை வழிபட மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர். எந்த ஆடம்பரமான தூண்கள் மற்றும் கோபுரங்களும் இல்லாமலே மக்களின் மனதை தன்வசப்படுத்திய ஒரு தனிசிறப்பு வாய்ந்த யாத்ரீக தளமாகும் .ஒவ்வொரு வருடமும் ஐீலை மற்றும் ஆகஷ்ட் மாதங்களில் மக்கள் இந்த புனித பயணத்தை தொடங்குகின்றனர்.



Leave a Comment