எண்ணியவை ஈடேற்றும்...கிருஷ்ண ஸ்லோகம்!


ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி வரும் திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அத்தகைய சிறப்புமிக்க இத்திருநாளில் கிருஷ்ணருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கப்பெறும். 

ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்
ஆதிசங்கரரின் க்ருஷ்ணாஷ்டகம்

எல்லா மக்களுக்கும் ஆனந்தத்தை அளிப்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம். தாமரை போன்ற இதயத்தில் மோகத்தை உண்டாக்குப வரே, சூரியனைப் போல பிரகாசிப்பவரே, பக்தர்கள் விரும்பியதை உடனே அளிப்பவரே, கடைக்கண்ணால் எங்களைக் கடைத்தேற்று பவரே, இனிமை யாக வேணுகானம் செய்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.



Leave a Comment