சங்கடங்கள் தீர்க்கும் சப்த கன்னியர்


தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சப்த கன்னியரை வழிபட்டு பலன் பெறலாம்.

அன்னை ஆதிபராசக்தியின் அம்சத்தில் இருந்து உருவானவர்கள் ‘சப்தகன்னியர்’. சண்ட, முண்டர்கள் என்னும் இரண்டு அசுரர்களை அழிப்பதற்காக, கர்ப்பத்திலோ, ஆண்-பெண் இணைவிலோ பிறக்காமல், அம்பாளின் சக்திகளாக அவதரித்தவர்களே ‘பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னியர்கள்.


இவர்களே ‘சப்த கன்னிகள்’, ‘சப்த மாதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். பலர் தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சப்த கன்னியரை வழிபட்டு பலன் பெறலாம்.



Leave a Comment