மனம் போல் மாங்கல்யம் அமைய...ஆண்டாள் ஸ்லோகம்..


சூடிக்கொண்ட சுடர்கொடியான ஆண்டாளை துதித்து இந்த ஸ்லோகத்தை அம்பாளுக்கு உரிய நாளான ஆடிப்பூரத்தன்று (13-08-2018) ஜெபித்தால். நினைத்த வரம் கிடைக்கும். மனம் போல் மாங்கல்யம் அமையும்.

 அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்

அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:

தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா

தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:

கோதா ஸ்துதி

ஆண்டாள் அன்னையே, உம்மை வணங்குகின்றோம். சாத்திரங்கள் அனுமதிக்காத தவறுகள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள்  திருவருள் புரிகிறார்.இவையெல்லாம் உன்னால் அன்னையே நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் அன்னையே உம்மை மீண்டும் வணங்குகின்றோம்.



Leave a Comment