ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்...தோஷங்கள் விலக மஹா பௌர்ணமி யாகம்!


வாலாஜப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பௌர்ணமியை முன்னிட்டு திருமண தடை நீக்கும் யாகமும், காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்து கொண்டிருக்கும் திருக்காட்சி இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் புதுமையாக அமைக்கப் பட்டுள்ளது.

இந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம். ஆடி வெள்ளிக்கிழமையான இன்று காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும், வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது. இதில் எண்ணற்ற பக்தர்கள் பங்குபெறுகின்றனர்.



Leave a Comment