திருச்செந்தூரில் வரும் 30-ந் தேதி அய்யா வைகுண்டர் திருத்தேர் பவனி!


திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ந் திருவிழாவான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, 6.30 மணிக்கு பால் அன்னதர்மம், 9 மணிக்கு அன்னதர்மம், 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, 1 மணிக்கு அன்னதர்மம், 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, மாலை 6 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி, 8 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11-ந் திருவிழா வருகிற 30-ந் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் அய்யா வைகுண்டர் திருத்தேரில் எழுந்தருளி அணைவருக்கும் காட்சியளிக்கிறார். இந் நிகழ்ச்சியில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலாளர் மற்றும் ஊர் மக்கள் அணைவரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.



Leave a Comment