ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை


ஆடிப் பிறப்பை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திரமரியாதை கொண்டு செல்லப்பட்டது.

திருப்பதி தேவஸ்தானத்தில் ஆடிப் பிறப்பை முன்னிட்டு ஆண்டுதோறும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வஸ்திர மரியாதை செல்வது வழக்கம்.

இதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து மங்கள பொருட்கள் பெருமாளின் வஸ்திரங்கள், ஸ்ரீ ரங்கம் ஆண்டாள்கோயில் யானை மீது வைத்து எடுத்துசென்றனர்.

பட்டர்கள் உடன் செல்ல உத்திர வீதிகளில் வலம் வந்து ரங்கா ரங்கா கோபுரத்தை அடைந்தது. பிறகு வஸ்திர மரியாதை திருப்பதி தேவஸ்தானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.



Leave a Comment