இறைவனின் வழிபாட்டில் பஞ்சபூதங்கள்!


கடவுளை வழிபடும்போது உணவுப் பொருட்களை படைப்பது. மலர்களால் பூஜை செய்வது, மணியடிப்பது என்ற பலவற்றைச் செய்கிறோம். இவை ஒவ்வொன்றிற்கும் காரண காரியமுள்ளது.

இறைவனுக்குப் பஞ்சபூதங்களும் அடிபணியும் என்பதை உணர்த்துவதற்காகவும், மனிதன் பஞ்சபூதங்களையும் பயன்படுத்துவதற்காக அவற்றை வணங்க வேண்டும் என்பதை எடு்ததுரைப்பதற்காகவும் பூஜைகள் நடைபெறுகின்றன.

 நீர் என்ற பூதத்தின் அடையாளமாகச் சுவை உணர்வைக் குறிக்கும் உணவுப் பொருட்களை இறைவனுக்குப் படைக்கின்றோம்.

மண் என்ற பூதம் மனதை நுகரும் புலன்களோடு சம்பந்தப்பட்டது எனவே அதனை குறிக்கும் வகையாக சந்தனத்தையும், சாம்பிராணிப் புகையையும் இறைவனுக்கு அர்பணிக்கிறோம்.

காற்று என்ற பூதம் தொடு உணர்ச்சியோடு தொடர்புடையது ஆகும். இதற்கு அடையாளமாக இறைவனுக்கு மலரிடுதல், சாமரம் வீசுதல் போன்றவற்றை செய்து வழிபடுகிறோம்.

ஆகாயம் என்ற பூதம் ஒலியோடு தொடர்புடையது. இதனை உணர்த்தும் வகையாக மணியடித்தல், சங்கு ஊதுதல் போன்ற சடங்குளைச் செய்கிறோம்.

நெருப்பு என்ற தத்துவம் கண் பார்வையுடன் தொடர்புடையது. எனவே கற்பூரம், தீபம் ஆகியவற்றை ஏற்றி தீபாராதணை செய்கிறோம்.

இவ்வாறு ஐம்புலன்களால் பஞ்சபூதங்களைப் பயன்படுத்தி, கோயிலிலும், வீட்டிலும் பரம்பொருளை அனைத்திற்கும் சாட்சியாக வைத்து நாம் வழிபட்டு வருகிறோம்.

 



Leave a Comment