முற்பிறவிக் கடன்களைத் தீர்க்கும் ரிணவிமோசனர்!


தமிழகத்து ஆலயங்கள் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு தனிச்சிறப்புகள் உண்டு. அந்த வகையில், கடன் தொல்லை தீர்க்கும் தலமாகத் திகழ்வது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சேறை செந்நெறியப்பர் சிவாலயமாகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தென்கரைத்தலங்களுள் ஒன்றாக, இச் சிவாலாயம் விளங்குகிறது.

மனிதனுக்குச் செம்மை தரும் நெறியை முத்திநெறியை அளிக்கும் தலமாக விளங்குவதால், இறைவனுக்குச் செந்நெறியப்பர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும் முற்பிறவிக் கடன் தீர்க்கும் தேவாரத்தலமாகவும் விளங்குகிறது.கடன் பிரச்சனையை போக்கும் ரிணவிமோசனர் வாழும் தலமாகவும் இக்கோவில் போற்றப்படுகிறது.இக்கோவிலில் மூலவராக ரிணவிமோசனர் அருள்பாலிக்கிறார். மேலும் எந்தச் சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக இங்குள்ள பைரவர் தனது இடது மேல்கரத்தில் சூலம் போட்ட மணியுடன் காட்சி தருகின்றார். மேலும் சிவதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்னும் மூவகை தேவியர்கள் இத்திருத்லத்தில் வீற்றிருக்கிறார்கள். மேலும் ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தர்சஷ்டி, பிரதோஷம் போன்ற சிறப்பு நாட்களில் இங்குள்ள மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். எண்ணற்ற சிறப்பம்சமுள்ள இத்திருத்லத்திற்கு பக்தர்கள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.



Leave a Comment