திருச்சானூர் பத்மாவதி தாயார் கருட வாகனத்தில் வீதி உலா


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சுந்தராஜா சுவாமி அவதார உற்சவத்தையொட்டி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுந்தரராஜ சுவாமி கோவிலில் அவதார உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சுந்தராஜா சுவாமி கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

புராண கதையின் படி முகலாயர்கள் காலத்தில் மதுரையில் உள்ள அழகிரி பெருமாள் கோவிலை இடிக்க முயன்றனர். அப்போது அங்குள்ள அர்ச்சகர்கள் சுந்தர்ராஜ சுவாமியை திருச்சானூருக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் 1902 ஆம் ஆண்டு மகந்துகள் காலத்தில் தேவஸ்தான நிர்வாகம் இருந்தபொழுது திருச்சானூரில் சுந்தராஜ சுவாமிக்கு கோவில் கட்டப்பட்டப்பட்டு அதில் மூலவர் சிலை அமைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு உற்சவங்கள் நடத்தப்பட்டு வந்தது. சுந்தராஜ சுவாமி உற்சவர் சிலை மதுரையிலிருந்து ஆனி மாதம் கொண்டு வரப்பட்டதால் உத்திராடம் நட்சத்திரத்தில் முடியும் விதமாக சுந்தராஜ சுவாமி அவதார உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த இரண்டு தினங்களாக சுந்தராஜா சுவாமி அவதாரம் நடைபெற்று வந்தது. கடைசி நாளில் கருட வாகனத்தில் சுந்தராஜா சுவாமி விதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்தார்.



Leave a Comment