பன்னிரெண்டாவது பதிணெண்சித்தர் கூறிய ஆலய பிரகாரத்தை சுற்றும் முறைகள்


சிவபெருமானுடைய பிராகரத்தை இடமிருந்து வலமாக ஜந்து முறை சுற்றி வர வேண்டும்

விநாயகர், முருகன், அய்யனார், கருப்பன்னசாமி முதலியவர்களுக்கு இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றி வர வேண்டும்

திருமால், குபேரன் பிரகாரங்களை இடமிருந்து வலமாக நான்கு முறை சுற்றி வர வேண்டும்

சனீஸ்வரன், சூரியன், சந்திரன், பைரவர், பலி பீடம், கொடிமரம் முதலியவர்களை இடமிருந்து வலமாக ஏழு முறை சுற்றி வர வேண்டும்.

பறவை, விலங்கினங்கள் சமாதுகளை வலமிருந்து இடமாக நான்கு முறைச்சுற்றி வர வேண்டும்

துறவிகள் சமாதுகளை வலமிருந்து இடமாக ஏழு முறை சுற்றி வர வேண்டும்.

இல்லறத்தார் சமாதை வலமிருந்து இடமாக ஒன்பது முறைச்சுற்றி வர வேண்டும்.

பசுக்களை வலமிருந்து இடமாக மூன்று முறைச்சுற்றி வர வேண்டும்

பூசையில்லாத அல்லது பாழடைந்த கோவில்களை வலமிருந்து இடமாக மூன்று முறைச்சுற்றி வர வேண்டும்.

ஆசி வழங்கக் கூடிய குருவை, அருளார்களை வலமிருந்து இடமாக பதினெட்டு முறைச்சுற்றி வர வேண்டும். ஒவ்வொரு முறையும் அவரது பாதம் தொட்டு வணங்க வேண்டும்.

குறிப்பு: (நீங்கள் அவர்களைப் பார்த்து முன்னால் நிற்கும்போது, உங்களின் இடதுகை, வலதுகை அடிப்படையில் தான் இடப்புறம், வலப்புறம் கையாளப்பட வேண்டும்.)

 



Leave a Comment