குரு பகவானுக்கு பரிகாரம்


வியாழக்கிழமைகளில் குருவுக்கு விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபடலாம். தட்சிணாமூர்த்தி சன்னிதி உள்ளகோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். மேலும் முடிந்தவர்கள் தட்சிணாமூர்த்திக்கோ, அல்லது குருவுக்கோ அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, கொண்டைக் கடலையை தானம் செய்வது நல்லது. இந்த தானம் கட்டாயம் கிடையாது. குரு பகவானின் அருள் மேலும், மேலும் வேண்டும் என்பவர்கள் செய்தால் மட்டும். போதும்.

குருபகவானை வழிபட சில ஸ்லோகங்கள்: 

குருப்ரம்ஹோ குருவிஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு சாட்சாத் பரப்ரம்ஹா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹா
குருவே சர்வலோஹானாம் பீஷஷே பவரோஹினாம்
நிதயே சர்வ வித்யானம் தட்ஷினா மூர்த்தியே நமஹ



Leave a Comment