பழனி முருகன் கோவிலில் மேலும் ஒரு ரோப்கார் வழித்தடம்


பழநி மலை முருகன் கோயிலில் 2-வது ரோப்கார் வழித்தடம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. மலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல ரோப் கார்கள் மற்றும் இரண்டு இழுவை ரயில்கள் செயல்பட்டு வருகின்றன.

எனினும் விஷேச நாட்களில் ரோப் காரில் பயணிக்க பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு 73 கோடி ரூபாய் செலவில் தற்பொழுது இரண்டாவதாக மேலும் ஒரு ரோப் கார் செல்லும் வழித்தடம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.

அதற்காக நடைபெற்ற வாஸ்து பூஜையை இணை ஆணையர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். இந்த புதிய ரோப் கார் மூலம் ஒரு மணி நேரத்தில் 1,200 பேர் வரை பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Leave a Comment