விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோயிலில் பிரம்மோர்சவ விழா


விழுப்புரத்தில் வைகுண்டவாச பெருமாள் கோயிலில் பிரம்மோர்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று இருக்கிறது. புஷ்பயாகம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரத்தில் உள்ள வைகுண்டவாச பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோஹசவ விழா நடைப்பெறுவது வழக்கம். அதன் படி, இந்தாண்டின் பிரம்மோஹசவ விழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக புஷ்பயாகம் நடைப்பெற்றது. இதனையொட்டி, சிறப்பு யாகம் நடத்தப்பட்டன.

பின்னர், பூ தேவிக்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு டன் வண்ணமிகு பல்வேறு வகையான வாசனை மலர்களை கொண்டு பூஜிக்கப்பட்டது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.



Leave a Comment