ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கோடை திருநாள் தொடங்கியது


திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கோடை திருநாள் துவங்கி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ரங்கநாச்சியார் சன்னதியில் ஜூன் 8 வரை பூச்சாற்று உற்சவம் நடைபெறுகிறது. ஜூன் 3 ஆம் தேதி வரை வெளிக்கோடை திருநாள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு மாலை 6.30மணிக்கு ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 7 மணிக்கு வெளிக்கோடை மண்டபம் சேர்ந்தார்.

4ம் தேதி மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். 6.30க்கு வெளிக்கோடை மண்டபம் அடைகிறார். இரவு 7.30க்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பிறகு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்படுகிறார். 7.45க்கு உள்கோடை ஆஸ்தான மண்டபம் வந்தடைகிறார்.

8.45க்கு உள்கோடை மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 9.45க்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானத்தை அடைகிறார். 9 முதல் 15ம் தேதி வரை ரங்கநாச்சியார் வசந்தம் திருநாள் நடைபெற உள்ளது. 9ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6.30க்கு வசந்த மண்டபத்தை அடைகிறார். இரவு 8.30 மணிக்கு அலங்காரம் வகையாறு கண்டருள்கிறார். விழா காலங்களில் தினமும் இரவு 8.30க்கு மேல் மூலவர் சேவை கிடையாது.



Leave a Comment