நெல்லையப்பர் கோயிலில் 27 இல் உழவாரப் பணி


திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் மே 27 ஆம் தேரி உழவாரப்பணி நடைபெறுகிறது.


ஸ்ரீநெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் பக்தர் பேரவை சார்பில் ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நெல்லையப்பர் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்று வருகிறது. அமைப்பின் சார்பில் 227ஆவது உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நெல்லையப்பர் கோயிலில் ஸ்ரீஆறுமுகநயினார் சன்னதியில் இருந்து தொடங்கப்படுகிறது.


அமைப்பின் சார்பில் அன்றைய தினம் திருநெல்வேலி நகரத்திலுள்ள அருள்மிகு கரிய மாணிக்கப்பெருமாள் கோயில், அருள்மிகு தொண்டர்கள் நயினார் கோயில், சம்பந்தர் தெருவிலுள்ள அருள்மிகு திருஞானசம்பந்தர் கோயிலில் உழவாரப்பணி நடைபெறுகிறது.



Leave a Comment