கல்வியில் சிறந்து விளங்க வைக்கும் சரஸ்வதி தேவி கோயில்


திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் வெண்ணிற ஆடையில் வெண் தாமரையில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் ஞானக் கண்ணுடன் சரஸ்வதி தேவி அருள்பாலித்து வருகிறாள்.


சரஸ்வதிக்கான பிரத்யேகமான தலங்களில் இது முக்கியமானது. இரண்டாம் ராஜராஜசோழனால் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட கோயில். அதனால் கூத்தனூர் என்று பெயர். கருவறையில் வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள், சரஸ்வதி. வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கியிருக் கிறாள். ஜடா முடியுடன், ஞானச்சஸ் என்கிற மூன்றாவது கண்ணும் கொண்டு, கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். முதன் முதலாக அட்சராப்பியாசம் என்கிற கல்வியைத் தொடங்கும் குழந்தைகள் இங்கு வந்து ஆரம்பிக்கிறார்கள்.


தேவிக்கு சிவபெருமானைப் போல மூன்று கண்கள் காணப்படுகின்றன. நெற்றியில் உள்ள மூன்றாவது கண் ‘ஞானக் கண்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சரஸ்வதி தேவியை வழிபாடு செய்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம். இத்தலம் மயிலாடுதுறை -திருவாரூர் சாலையில் 20 கி.மீ. தொலை விலுள்ள பூந்தோட்டம் எனும் தலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

 



Leave a Comment