திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இலவச தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கோடை மற்றும் வாரவிடுமுறையையொட்டி, திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலை வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால், இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தவிர்க்க, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து நேர ஓதுக்கீட்டிற்கான டிக்கெட் பெற்றால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் 300 ரூபாய் கட்டணம் செலுத்திய பக்தர்களும், பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும், மூன்று மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment