உறையூர் நாச்சியார் கோயிலில் பெருமாள் சேர்த்தி சேவை


உறையூர் நாச்சியார் கோயிலில் பெருமாள் சேர்த்தி சேவை நேற்று நள்ளிரவு வரை நடந்தது. திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், நாச்சி யார் சேர்த்தி சேவை நேற்று நடந்தது. இதற்காக ஸ்ரீரங்கம் கோயில் கண்ணாடி அறை யில் இருந்து நம்பெருமாள் தங்க பல்லக்கில் அதிகாலை 3.30 மணிக்கு புறப் பட்டு வழி நடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் முன்பு உள்ள மண்டபத்துக்கு மதியம் 12 மணிக்கு சென்றடைந்தார். அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்துக்கு மதியம் 1.15 மணிக்கு வந்தார். பின்னர் மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நம்பெருமாள், கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நடை பெற்றது. பின்னர் சேர்த்தி மண்டபத்தில் இருந்து அதிகாலை 1.30க்கு நம்பெருமாள் புறப்பா டாகி, இன்று காலை 4 மணிக்கு வெளிஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு கண்ணாடி அறைக்கு சென்றடைந்தார்.



Leave a Comment