மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கோலகலம்.....


சிவ தலங்களில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்தாண்டு பங்குனி பெருவிழா மார்ச் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று கோலவிழியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இரவு 9.30 மணியளவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளினார். தொடர்ந்து, நேற்று காலை 5.15 மணிக்கு பங்குனி பெருவிழா கொடியேற்றம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர, கெட்டிமேள இசை ஒலிக்க பலத்த ஆரவாரத்துடன் காலை 5.15 மணியளவில் பங்குனி பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து புன்னைமரம், கற்பக மரம், வேங்கை மர வாகனங்கள் சுவாமி வீதியுலா வந்தார். பங்குனி பெருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாய்ப்பாட்டு, வயலின், நாதஸ்வரம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் சூரிய வட்டம், இரவு 9 மணியளவில் சந்திர வட்டம் நடக்கிறது. பின்னர் கிளி, அன்ன வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருகிறார்.



Leave a Comment