திருமலையில் படி உற்சவம்


திருப்பதியில் அன்னமாச்சார்யாரின் சிலைகளுடன் மலை ஏறிய அன்னமாச்சார்யா திட்டத்தினர்.
திருப்பதியில் அன்னமாச்சார்யாரின் 515-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை படி உற்சவம் நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னமாச்சார்யாரின் திட்டத்தினர் செவ்வாய்க்கிழமை காலை திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி பாதாள மண்டபத்தில் அன்னமார்ச்சார்யாரின் சிலையை வைத்து, பஜனை பாடல்கள் பாடி சிறப்பு பூஜை செய்தனர்.
அதன்பின், அன்னமாச்சார்யாரின் சிலைகளுடன் அவர்கள் பஜனை பாடல்களை பாடிய படி திருப்பதி மலையில் ஏறி ஏழுமலையானை தரிசித்தார்.



Leave a Comment