பழநி கோயிலில் வரும் 24ல் கொடியேற்றம்


முருகக் கடவுளின் விழாக்களில் பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். பழநி தண்டாயுதபாணி சாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் 24ம் தேதி காலை 11 - 12 மணிக்குள் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 29ம் தேதி நடக்கிறது. அன்றிரவு 7 - 8.30 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், முத்துக்குமாரசாமி மற்றும் வள்ளி-தெய்வானை மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். பங்குனி உத்திர தேரோட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது.



Leave a Comment