திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரும் மேற்கூரை


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரும் மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ஏழுமலையான் கோவிலில் சன்னதிகள், மண்டபங்கள், பிரசாதம் தயாரிக்கும் பகுதிகள், உண்டியல் காணிக்கை எண்ணும் பகுதிகளை தவிர மற்றவை மேற்கூரையின்றி திறந்த வெளியில் உள்ளது. இதனால் கோடை வெயில், அடைமழை மற்றும் கடும் பனி காலங்களில் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் அப்பகுதிகளில் தேவஸ்தான நிர்வாகம் நகரும் மேற்கூரை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. மேலும் திருப்பதியில் குழந்தை கடத்தல், வழிப்பறி செயின் பறிப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கவும், பக்தர்களுக்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கவும் திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருமலை நடைபாதை மார்க்கங்கள் மாடவீதிகள், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் 1400 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



Leave a Comment