திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் தெப்போற்சவம் ....


திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் விமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து 7 நாள்கள் நடைபெற உள்ள இந்த தெப்போற்சவம் தை மாத பௌர்ணமி அன்று நிறைவு பெறுகிறது. இதற்காக கோவிந்தராஜ சுவாமி திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு, புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது. திருக்குளத்தில் ஏற்படுத்திய தெப்பம் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தெப்போற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெப்போற்சவம் தொடங்கியது. அதில் கோதண்டராம சாமி சீதா, லட்சுமணருடன் திருக்குளத்தில் 5 முறை வலம் வந்தார். தெப்பத்தில் வேதபண்டிதர்கள் அமர்ந்து வேதம் ஓதினர். அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்தவர்கள் பக்திப் பாடல்களைப் பாடினர். தெப்போற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். தெப்பம் அருகில் வரும் போது எழுந்து நின்று கற்பூர ஆரத்தி காண்பித்தனர்



Leave a Comment