கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தடாக பிரதிஷ்டை விழா


நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தடாக பிரதிஷ்டை விழா ஜனவரி 19 ஆம் தேதி நடக்கிறது.
16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் கோவில் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் அமைந்து உள்ளது. இந்த கோவிலின் முன்புறம் நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்கும் விதமாக உள்ள தெப்பக்குளம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை புனிதப்படுத்தும் பூஜையாக நரசிம்ம புஷ்கரணிக்கு, தடாக பிரதிஷ்டை விழா நாளை நடக்கிறது. இதையொட்டி ஜனவரி 18 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் நித்யலாராதனம், யஜமான-ஆச்சாரிய வரணம், புண்யாஹவாசனம், பகவத் ப்ராத்தனா, ம்ருத்ஸங்கிரகணம், அங்குரார்ப்பணம், பிரதீசர ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப ஆவாஹணம், கும்ப ரஷ்பந்தனம், பிரதான உக்த ஹோமங்கள், நைவேத்யம் நடக்கிறது. 19 ஆம் தேதி காலை 6.30 மணி முதல் பிரதான உக்த ஹோமங்கள், வேதபாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, கங்கா-நர்மதா-ஸம்யுக்த ஸ்ரீநரசிம்ம புஷ்கரணிக்கு அனைத்து விதமான அபிசேகங்கள், கும்ப தீர்த்தத்தை திருக்குளத்தினுள் சேர்த்தல், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தீர்த்த வலம் வந்து பூஜைகள் நடைபெறுகிறது.



Leave a Comment