சபரிமலையில் மகரஜோதி தரிசனம்...


சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தை முதல் தேதி சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவில் மலை முகட்டில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பான் என்பது ஐதீகம். இதை ஒட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். மாலை 6.30 மணியளவில் பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிந்தது. மகரஜோதியை கண்டு பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர். வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை படி பூஜைகள் நடக்க உள்ளன. இதையடுத்து, பந்தளம் கொட்டார ராஜ தரிசனத்திற்கு பின்னர் கோவிலின் நடை அடைக்கப்படும்.



Leave a Comment