திருப்பதியில் 5 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து


ரதசப்தமியையொட்டி திருப்பதியில் ஜனவரி 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் வருகிற 24-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. இதையொட்டி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை 7 வாகனங்களில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வருகிறார். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அதனால் வருகிற 24-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது. அந்த நாட்களில் அதிமுக்கியத்துவ வி.ஐ.பி.கள் மட்டுமே தரினத்துக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் 24-ந் தேதி அன்று ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமகன், மாற்றுத் திறனாளிகள், கைக் குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனங்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. நடைபாதை மார்க்கத்தில் வருபவர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள், ரூ.300 விரைவு தரிசனம் உள்ளிட்டவை வழக்கம் போல் வழங்கப்படும்.



Leave a Comment