திருப்பதி கோயிலில் ரூ.1000 கோடி உண்டியல் காணிக்கை


திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்தியாவின் முதல் பணக்கார கடவுளான ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்தாண்டு 2 கோடியே 73 லட்சத்து 19 ஆயிரத்து 897 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் 995.89 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், 10 கோடியே 66 லட்சத்து 72 ஆயிரத்து 730 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 66 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 594 பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, கடந்தாண்டில் 1 கோடியே 22 லட்சத்து 37 ஆயிரத்து 368 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதன் விற்பனை மூலம் ரூ.6.39 கோடி வருவாய் கிடைத்துள்ளது.



Leave a Comment