தியாகராஜர் கோயிலில் திருவாதிரை விழா


திருவாரூர் தியாகராஜர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு நடைபெற்ற சாமியின் பாத தரிசன நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். திருவாதிரை விழாவின் முதல் நாளான நேற்று இரவு தியாரகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் சாமியின் பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாத தரிசனத்தை தொடர்ந்து மாலை சகஸ்கரநாம அர்ச்சனை மற்றும் மகா அபிஷேகம் நடைபெறுகிறது உள்ளது. திருக்கயலாயத்தில் தேவர்கள் திருவாதிரை நாளில் நடராஜ பெருமானின் நடனத்தை பார்க்க விரும்பியதாகவும், அப்போது நடராஜர் நடனமாடிய போது இடது காலை சிதம்பரம் கோயிலிலும், வலது காலை திருவாரூர் தியாகராஜர் கோயிலில் காட்டியதாகவும் ஐதீகம். இதனையொட்டி இந்த கோயிலில் சாமியின் வலது பாத தரிசன நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. காலை 6 மணி முதல் தியாகராஜ பெருமான் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும், 7மணி அளவில் நடராஜபெருமான் தரிசனமும் நடந்தது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment