திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் மீண்டும் தொடக்கம்...


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டிருந்த அனைத்து ஆர்ஜித சேவைகள் ஜனவரி 2 ஆம் தேதி முதல் மீண்டும் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ஒருநாள் மட்டும் 74 ஆயிரத்து 144 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். துவாதசி தரிசனத்தில் 75 ஆயிரத்து 658 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் 1.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். முன்னதாக, வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனவரி 2 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் தொடர்ந்து நடைபெறும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



Leave a Comment