திருமலையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி


வைகுண்ட துவாதசியை முன்னிட்டு திருமலையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்தனர். அதிகாலை 5 மணியளவில் ஏழுமலையான் கோயிலில் இருந்து ஜீயர்கள் முன்னிலையில் வராக சுவாமி கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்திற்கு சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து தெப்பக்குளத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. இதைதொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.



Leave a Comment