கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் மார்கழி மலர்க்காவடி...


கோவில்பட்டி அருகேயுள்ள குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் மலர்காவடி மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புகழ்பெற்ற குடவரை கோவிலான கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் மார்கழி மாத ஆயிரத்து 8 மலர்க்காவடி மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி கழுகாசலமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் முன்பு தொடங்கிய மலர்க்காவடி ஊர்வலத்தில், மலர்களால் நிரம்பிய மலர்காவடிகளை பக்தர்கள் தோளில் சுமந்து அரோஹாரா கோஷங்களுடன் கிரிவல பாதையில் வலம் வந்தனர். பின்னர் கழுகாசலமூர்த்திக்கு, பக்தர்கள் கொண்டு வந்த மலர்காவடியில் இருந்த மலர்களைக் கொண்டு பூச்சொரிதலும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.



Leave a Comment